இன்றுமுதல் போதைப்பொருள் ஒழிப்பு வாரம் அனுஷ்டிப்பு!

Sunday, June 23rd, 2019

உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்திற்கு இணையாக இன்றுமுதல் ஒருவார காலத்திற்கு போதைப்பொருள் ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் 26 ஆம் திகதி  அனுட்டிக்கப்படவுள்ள உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்திற்கு இணையாக நாட்டில் பல்வேறுப்பட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கைக்குள் அமுல்படுத்தப்படும் போதைப்பொருள் ஒழிப்பு செயற்பாடுகளை தொடர்ந்தும் வலுப்படுத்துவது மற்றும் சகல பிரஜைகளையும் அதற்காக ஒன்றிணையச் செய்வது அதன் முக்கிய நோக்கமாகும்.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் அமுலாகும் கொள்கை, சட்டமுறைமை மற்றும் புனருத்தாபனம் என்ற பிரதான தொனிப்பொருளின் ஊடாக நாடளாவிய ரீதியாக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

9 மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதுடன் போதையிலிருந்து விடுதலை பெறுவது குறித்து தெளிவுப்படுத்தல், தொழிற்பயிற்சி நிறுவனங்களில் மாணவர்களுக்கு தெளிப்படுத்துதல், புனருத்தாபனத்தின் பின் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள் தொடர்பான பின்னணி அறிக்கை உள்ளிட்ட பல செயற்திட்டங்கள் இதில் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: