ஆசிரிய உதவியாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்படும் – கல்வி அமைச்சர்!

Thursday, February 2nd, 2017

பெருந்தோட்ட பகுதி ஆசிரியர் உதவியாளர்களுக்கான கொடுப்பனவு 4 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் உறுதியளித்துள்ளார்.

பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கான 5 ஆம் கட்ட நியமனம் வழங்கும் நிகழ்வு கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய கல்வி இராஜாங்க அமைச்சர், வீ.ராதாகிருஸ்ணன், பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து உரையாற்றிய கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், பெருந்தோட்ட ஆசிரிய உதவியாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் 6 ஆயிரம் ரூபா கொடுப்பனவுடன் மேலும் 4 ஆயிரம் ரூபா அதிகரித்து 10 ஆயிரம் ரூபாவாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளபடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போது காணப்படும் 60 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதாகவும் கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும், தேசிய பாடசாலைகளில் மேலதிகமாக காணப்படும் 2 ஆயிரம் ஆசிரியர்களை மாகாண பாடசாலைகளுக்கு இடமாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

Akila-Viraj-Kariyawasam

Related posts: