ஆசிரியர் இடமாற்ற சபை கலைப்பு: பிரச்சினைக்கு நாளை தீர்வு – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Sunday, March 19th, 2023

ஆசிரியர் இடமாற்ற சபை கலைக்கப்பட்டமையை அடுத்து ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு நாளையதினம் தீர்வு கிடைக்கபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்ற நிழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கல்வியமைச்சின் செயலாளரினால் நாளைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலந்துரையாடலில் குறித்த பிரச்சினை படிப்படியாக தீர்க்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: