ஆசிய பிராந்திய நாடுகளை பாதித்துள்ள அதிக வெப்பம் – கிழக்கு இந்திய மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் கடும் பாதிப்பு!
Sunday, May 5th, 2024ஆசிய பிராந்திய நாடுகளை பாதித்துள்ள அதிக வெப்பம் காரணமாக கிழக்கு இந்திய மக்கள் கடும் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்துள்ளனர்.
கிழக்கு இந்தியாவில் கடந்த 1901 ஆம் ஆண்டுக்கு பிறகு பதிவான மிக அதிகளவான வெப்பநிலை இந்த ஏப்ரல் மாதம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவை பாதித்துள்ள இந்த வெயிலின் தாக்கத்தால், இதுவரை 9 பேர் உயிரிழந்தனர்.
பங்களாதேஷிலும் 40 டிகிரி செல்சியஸ் வெப்பமான வானிலை பதிவாகியுள்ளதுடன் 7 தசாப்தங்களின் பின்னர் நாட்டை பாதித்த மிக மோசமான வெப்ப அலை வானிலையாக இது பதிவுகியுள்ளது.
தாய்லாந்திலும் தற்போது அதிகளான வெப்பநிலை பதிவாகியுள்ளதுடன், அதன் தாக்கத்தினால் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
நைஜரில் பாடசாலையில் பற்றிய திடீர் தீவிபத்தால் 20 மாணவர்கள் உடல் கருகி பலி!
பாடசாலைகளில் ஆசிரியர், மாணவர்களின் வருகை எதிர்பார்த்ததைவிட அதிகளவில் உள்ளது - ஆசிரியர்கள் மாகாணங்கள...
நிலக்கரி கொள்வனவு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் - நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவிப்பு!
|
|