அவசர சிகிச்சை பிரிவுகளில் 186 கொரோனா நோயாளர்கள் – சுகாதார அமைச்சின் கொவிட் 19 இணைப்பாளர் தெரிவிப்பு!
Sunday, August 29th, 2021
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இதுவரை 186 பேர் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் கொவிட் 19 இணைப்பாளர், வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
அத்டதுடன் இதுவரை 942 கொரோனா நோயாளர்கள் ஒக்சிஜனின் உதவியுடன் சிகிச்சை பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீரிழிவு, இரத்த அழுத்தம், இருதய நோய் மற்றும் சிறுநீரக நோய் உள்ளிட்ட நீண்டநாள் நோய் தாக்கங்களுக்கு உள்ளான 4 ஆயிரத்து 347 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியர் அன்வர் ஹம்தானி இதன்போது சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையில் அதி நவீன ரயில் நிலையம் நிர்மாணிப்பு!
நாடாளுமன்றத் தேர்தலே நெருக்கடி நிலைக்கு தீர்வு – முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன வலியுறுத்து!
யாழ்ப்பாணத்தில் கடந்த வருடம் 4269 பேருக்கு டெங்கு தொற்று!
|
|
|


