அலுகோசு பதவிக்கான விண்ணப்பங்கள் ஏற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு!
Monday, February 25th, 2019அலுகோசு பதவிக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்றுடன்(25) நிறைவடைவதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார
இன்று(25) நண்பகல் 12 வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மரண தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்காக வெளிநாட்டு பிரஜையொருவரை நியமிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அலுகோசு பதவிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில், கிடைத்துள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் வெளிநாட்டவரை அலுகோசு பதவிக்கு நியமிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும், குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
கொக்குவில் இந்துக்கல்லூரி அதிபர் நியமன முறைகேட்டுக்கு எதிரான போராட்டத்திற்கு ஈ.பி.டி.பி ஆதரவு!
தொடருந்துகளில் யாசகம் பெறுவோரைக் கைது செய்யும் நடைமுறை அமுலில்!
நாட்டில் 1 மில்லியன் மக்களிடம் பிறப்புச் சான்றிதழ் இல்லை – அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவிப்பு!
|
|