அரிசி விலை சடுதியாக அதிகரிப்பு!

Tuesday, August 29th, 2017

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டதையடுத்து வியாபாரிகள் தமது இஷ்டத்துக்கு விலைகளை உயர்த்தி வருவதாகப் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

புறக்கோட்டை மொத்த வியாபாரத்தில் அரிசிக்கான மொத்த விற்பனை விலை 75 தொடக்கம் 92 ரூபாவாகவும் இறக்குமதி செய்யப்பட்ட நாடு, பொன்னி, வெள்ளை அரிசி முறையே 65,75,80 ரூபாவாகவும், உள்நாட்டு சிவப்பரிசி 78 ரூபாவாகவும் சம்பா 92 ரூபாவாகவும் உள்ளன.

விலைக்கட்டுப்பாடு நீக்கப்பட்டதையடுத்து அரிசியின் சில்லறை விலை 4 தொடக்கம் 5 ரூபாவரை அதிகரித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசி 85 ரூபாவாகவும், சம்பா 95 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.

தற்சமயம் 45 ஆயிரம் மெட்ரிக்தொன் அரிசி கையிருப்பில் உள்ளது எனவும், அது இந்த வாரத்தில் லக்சல சதொச விற்பனைக் கூடங்கள் மூலம் விநியோகிக்கப்படும் எனவும் நெல் சந்தைப்படுத்தும் சபையின் தலைவர் எம்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த வருடம் உள்நாட்டில் நெல் உற்பத்தி வறட்சியின் காரணமாகக் கணிசமாகக் குறைந்துள்ளது. எனினும், இப்போது அறுவடை ஆரம்பமாகியிருப்பதால் வெளிநாட்டு அரிசி இறக்குமதி சற்றுத் தாமதப்படுத்தப்பட்டுள்ளது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் சிந்திக்க லொக்குஹெட்டி தெரிவித்துள்ளார்.

Related posts: