அரிசி விலைகள் உயர்ந்தாலும் நெல் ஆலை உரிமையாளர்கள் மிகக் குறைந்த விலைக்கே நெல்லை கொள்முதல் செய்வதாக விவசாயிகள் கவலை!

Saturday, February 24th, 2024

அரிசி விலைகள் உயர்ந்தாலும் நெல் ஆலை உரிமையாளர்கள் மிகக் குறைந்த விலைக்கு நெல்லை கொள்முதல் செய்வதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அறுவடை செய்யப்பட்ட நெல் விற்பனை செய்வதில் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை பயிர் விற்பனையில் விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் கூறியுள்ளது.

மேலும் நெல் விலையை அதிகரிக்க வேண்டுமாயின் அரிசியின் விலையை மேலும் அதிகரிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


லிட்ரோ நிறுவனம் 1.5 பில்லியன் ரூபாய் இலாபத்தை திறைசேரிக்கு பெற்றுக்கொடுத்துள்ளது - லிட்ரோ நிறுவனத்தி...
நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாட்டினால் வருடமொன்றுக்கு 2,800 பேர் வரை உயிரிழப்பு - சுகாதார அமைச்சு...
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டம் - ஜனவரி மாதம்முதல் விண்ணப்பம் கோரப்படவுள்ளதாக நிதி இர...