அரச மற்றும் தனியார் துறைகளின் பணிகளை மீள ஆரம்பிக்க தீர்மானம் – ஜனாதிபதி!

Thursday, April 16th, 2020

எதிர்வரும் நாட்களில் அரச மற்றும் தனியார் துறை பணிகளை மீண்டும் ஆரம்பித்து அன்றாட நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற விசேட கூட்டத்தின் போதே இவ்வாறு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பணிகளை தடையின்றி மேற்கொள்ளும் வகையில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதற்கும் குறித்த கூட்டத்தில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் குறித்த கூட்டத்தின்போது மக்களை ஒன்றுக்கூடுவதற்கு இடமளிக்காமல் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி கடமைகளை நடத்தி செல்வதற்கான பொறுப்பினை அமைச்சின் செயலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதானிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விவசாயம், மீன்வளம் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில்களை மீண்டும் முழுமையாக ஆரம்பிப்பதற்கு தேவையான சூழலை அமைப்பதில் அமைச்சுகளுக்கு ஆலோசனை வழங்கி செய்படுமாறு குறித்த ஆலோசனை கூட்டத்தில் ஜனாதிபதி, அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதுடன் புதிய பொருளாதார முறையை உருவாக்குவதற்கான பொறிமுறையை வளர்ப்பதற்கான பொறுப்பு அமைச்சுக்களிடம் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts: