அயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ள டுவிட்டர் செய்தியில் பாரதப் பிரதமர் தெரிவிப்பு!
Tuesday, January 19th, 2021
அயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ள டுவிட்டர் செய்தி ஒன்றிலேயே இந்த கருத்தை மோடி குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசித் திட்டம் முன்னெடுக்கப்படுவதை முன்னிட்டு கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்து டுவிட்டர் செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்திருந்த பிரதமர் மோடி, அயல்நாடுகளுக்கு உதவும் இந்தியாவின் திட்டம் கொரோனா தடுப்பூசி விடயத்திலும் தொடரும் என்று உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காரணமாக இன்றும் மழை!
நாளைமுதல் எந்தவொரு சமையல் எரிவாயுவிற்கும் தட்டுப்பாடு இருக்காது - இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன ...
வன்முறையை விதைத்தவர்களிடமிருந்து நாட்டை பாதுகாக்க சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தவது மனித உரிமை மீறலா...
|
|
|


