அமைச்சர் டக்ளஸ் அறிவுரை : முல்லைத்தீவு சாலை ஊழியர் இருவர் மேற்கொண்ட போராட்டம் கைவிடப்பட்டது!

Thursday, August 12th, 2021

தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இலங்கை போக்குவரத்து சபையின் முல்லைத்தீவு சாலை ஊழியர்கள் இருவர் இன்று பேருந்து சாலை முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்த நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அறிவுறுத்தலுக்கமைய முடிவுறுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு சாலையில் பணியாற்றும் அதிகாரி ஒருவரின் செயற்பாட்டிற்கு நீதிகோரியே இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை குறித்த இருவரும் மேற்கொண்டுள்ளார்கள்.

இதன்போது வடபிராந்திய பிரதான முகாமையாளர் குணபாலச்செல்வன் சம்பவ இடத்திற்கு சென்று கவனயீர்ப்பு போராட்டக்காரர்களின் பிரச்சினையினையை கேட்டறிந்து கொண்டுள்ளார்.

இதன்போது குறித்த இரு போராட்டகாரர்கள் தங்கள் கோரிக்கையை பிராந்திய பிரதான முகாமையாளரிடம் கையளித்திருந்தனர்.

இந்நிலையில் ஒரு மாத காலத்திற்குள் போக்குவரத்து சாலை பணியாளர்களின் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக அவர் தெரிவித்துள்ளதை தொடர்ந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அறிவித்தலுக்கு அமைவாக போராட்டத்தனை நிறைவிற்கு கொண்டுவந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: