அமெரிக்காவின் கடற்படை கப்பல் இலங்கை வருகை!

Saturday, July 23rd, 2016

கடந்த நான்கு மாதங்களுக்குள் அமெரிக்காவின் இரண்டாவது கடற்படை கப்பல் ஒன்று இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக கடந்த மார்ச்சில் அமரிக்காவின் 7வது பிரிவின் யுஎஸ்எஸ் புளுரிஜ் என்ற கடற்படை கப்பல் இலங்கைக்கு வந்துசென்றது. இந்தநிலையில் யூஎஸ்எஸ் நியூ ஒர்லீன்ஸ்( LPD 18) என்ற கப்பலே எதிர்வரும் 24ஆம் திகதியன்று கொழும்பு துறைமுகத்துக்கு வருகிறது.

இதில், அமரிக்காவின் 13வது கடலாய்வு பிரிவுப்படையினர் பயணம் செய்கின்றனர். கடந்த 7 மாதங்களாக இந்தக்கப்பல், மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்காசிய கடலில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. கப்பலில் வரும் சுமார் 200 அமெரிக்க கடற்படை வீரர்கள், இலங்கையின் கடற்படைவீரர்களுடன் இணைந்து பயிற்சிகள், அனர்த்த நிவாரணம் மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகள் என்பவற்றில் இரண்டு நாட்களுக்கு ஈடுபடவுள்ளனர்.

21ஆம் நூற்றாண்டு இந்திய பசுபிக் பிராந்தியத்துக்கு பல வழிகளிலும் முக்கியமான நூற்றாண்டாகும். இதில் இலங்கையை பொறுத்தவரை அந்த நாடு, முக்கிய இடத்தில் உள்ளது. இந்தநிலையில் அமெரிக்க கடற்படையினர், கடல் பாதுகாப்பு மற்றும் ஸ்திரதன்மை ஆகிய விடயங்களில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாக அமெரிக்கத் தூதுவர் அடுல் கெசாப் தெரிவித்துள்ளார்

Related posts:

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கல்வி அமைச்சு தனி அமைச்சு ஆக்கப்பட வேண்டும் - இலங்கைத் தமிழர் ஆசிரியர் ...
கிளிநொச்சி மாவட்டத்திற்கு மற்றொரு வரப்பிரசாதத்தை பெற்றுத்தந்துள்ளார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – மாவ...
இலங்கையில் இரண்டு இலட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை - மரணங்களின் எண்ணிக்கையும் நாளாந்...