அனைத்து அரச நிறுவனங்களிலும் இணையம் மூலம் பணம் செலுத்தப்படும் முறைமை –தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் நம்பிக்கை!
Thursday, December 14th, 2023அனைத்து அரச நிறுவனங்களிலும் இணையம் மூலம் பணம் செலுத்தப்படும் முறைமை நடைமுறைப்படுத்தப்படும் என நம்புவதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
14 அரச நிறுவனங்களில் டிஜிட்டல் நிதி அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதாகவும், சைபர் பாதுகாப்புச் சட்டம் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதற்கான அதிகாரசபையை ஸ்தாபிக்க எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் அநீதிக்கு உள்ளான எவரும் இலங்கை கணினி அவசர பதில் மன்றத்தின் 101 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு புதிய அத்தியட்சகர் நியமனம்!
வற் வரி அதிகரிப்பு கொள்கை - 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிரதான அரசியல் பேசுபொருளாக அமையும் - முன...
தரமற்ற ஊசி, சரியான முறையில் சிகிச்சை வழங்காமையே - தங்கை உயிரிழப்பு - யாழ். பல்கலை மாணவியின் சகோதரி க...
|
|