அத்தியாவசிய தேவை உள்ளவர்கள் மாத்திரமே மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியும் – பொலிஸ் ஊடக பேச்சாளர் அறிவிப்பு!

Wednesday, August 4th, 2021

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், அத்தியாவசிய காரணங்கள் அல்லாமல் வேறு காரணங்களுக்காக மாகாண எல்லைகளை கடக்கும் நபர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன எச்சரித்துள்ளார்.

அத்துடன் இவ்வாறு கடந்த தினங்களில் மாகாண எல்லையை கடந்து செல்ல முற்பட்ட பலர் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து அரச பணியாளர்களுக்கு மாத்திரமே திறக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நெருங்கிய உறவினர்களின் மரணச் சடங்குகளில் கலந்து கொள்வதற்காக செல்பவர்களும் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மாகாணம் கடந்த திருமண நிகழ்வுகளுக்காக சுகாதார விதிமுறைகளை கடைப்பிடித்து மணமகன் அல்லது மணமகள் தனது குடும்ப உறுப்பினர்கள் சிலருடன் பொலிஸ் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி பயணிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: