அதிபர் பதவிக்கான விண்ணப்பம் கோரல்!

Tuesday, November 7th, 2017

தீவகக் கல்வி வலயத்தில் அமைந்துள்ள பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள அதிபர் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

தம்பாட்டி அ.த.க பாடசாலை (வகை ii) மற்றும் பாலாவோடை இ.த.க பாடசாலை (வகை iii) ஆகிய பாடசாலைகளுக்கே அதிபர் பதவி வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன என்று தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் சு.சுந்தரசிவம் அறிவித்துள்ளார்.

அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது;

இலங்கை அதிபர் சேவை தரம் ii, iii ஐச் சேர்ந்தவர்களிடம் இருந்து வெற்றிடத்துக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. வகை ii பாடசாலைக்கு இலங்கை அதிபர் தரம் ii ஐச் சேர்ந்தவர்களின் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறாத பட்சத்தில் அதிபர் சேவை தரம் iii ஐச் சேர்ந்தவர்களின் விண்ணப்பங்களும் கருத்திற் கொள்ளப்படும். விண்ணப்பப்படிவங்களை தீவக கல்வி வலய நிர்வாகப் பிரிவில் பெற்று எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியவாறு நேரில் அல்லது வலயக்கல்விப் பணிப்பாளர், வலயக் கல்வி அலுவலகம், தீவகம் எனும் முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்குமாறு தெரிவித்துள்ளார்.

Related posts:


யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் அடாவடி: அதிருப்தியில் நெடுந்தீவு மக்கள் ஒன்று திரண்டு போராட்டம...
செப்ரொம்பர் முதலாம் திகதிமுதல் அனைத்து பாடசாலைகளையும் வழக்கம் போல பராமரிக்குமாறு கல்வி அமைச்சின் செ...
தீபாவளியை முன்னிட்டு யாழ் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள ஆலயங்களில் விசேட பூஜைகள் - ஆடைக் கொ...