அதிபர் – ஆசிரியர் சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கையில்!

Thursday, July 18th, 2019

இன்றும்(18) நாளையும்(19) சுகயீன விடுமுறை மூலமான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக, ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் சில அறிவித்துள்ளன.

நான்கு கோரிக்கைகளை முன்வைத்து இந்த சுகயீன விடுமுறைத் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக இலங்கை பொதுஜன கல்வி சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும், இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையில் தாம் உள்ளிட்ட பெரும்பாலான தொழிற்சங்கங்கள் ஈடுபடவில்லை என, இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts: