அதிக வெப்பம் – பாடசாலை மாணவர்களுக்கு சுகாதார அமைச்சினால் அவசர அறிவுறுத்தல்!.
Monday, February 26th, 2024அதிக வெப்பமான காலநிலையை கருத்திற்கொண்டு பாடசாலை மாணவர்களுக்கு சுகாதார அமைச்சினால் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, அதிக வெப்பநிலை நிலவும் நாள்களில் விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிக வெப்பநிலை நிலவும் நாள்களில் இல்ல விளையாட்டு போட்டிகள் மற்றும் பயிற்சிகளை நடத்துவதை தவிர்க்குமாறும் மாணவர்களை அதிகளவில் நீர் அருந்தச் செய்யுமாறும் சுகாதார அமைச்சின் குறித்த அறிவுறுத்தல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் வறட்சியான காலநிலையில் இன்றுமுதல் ஓரளவு மாற்றத்தை எதிர்பார்க்க முடியுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் பணி ஆரம்பம்!
பாடசாலை மாணவியை காணவில்லை - பொலிஸில் முறைப்பாடு!
குவைத்தில், சட்டவிரோதமாக தொழில் புரிந்த 62 இலங்கையர்கள் நாட்டுக்கு மீண்டும் அழைத்துவரப்பட்டனர்!
|
|