அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளை கண்டுபிடிப்பதற்காக இன்றுமுதல் விசேட நடவடிக்கை – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு!
Tuesday, July 2nd, 2024
நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளை கண்டுபிடிப்பதற்காக இன்றுமுதல் (02) விசேட சோதனை நடத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவ்வாறான பேருந்துகள் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு பயணிகள் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும் என அதன் திட்டமிடல் பணிப்பாளர் கே.எஸ்.சி கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்று நள்ளிரவுமுதல் பேருந்து கட்டணம் 5.07 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி 30 ரூபாவாக இருந்த குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 02 ரூபாவினால் குறைக்கப்பட்டு 28 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
உலங்குவானூர்திக்குள் குழந்தை பிரசவம்!
மக்கள் பணத்தை ஏப்பமிடுகிறது மாநகர சபைக்கான புதிய கட்டட அடிக்கல் நாட்டும் நிகழ்வும் “என்ரபிரைஸ் ஶ்ரீ...
பழைய காயத்தை மீண்டும் கிளறுவது நல்லிணக்கம் அல்ல - இதனால் நாட்டில் குரோத மனப்பாங்கு அதிகரிக்கின்றது எ...
|
|
|


