அதிக அளவில் காணிப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் மாவட்டமாக கிளிநொச்சி – மாவட்ட அரச அதிபர் தெரிவிப்பு!
Sunday, March 19th, 2023இடம்பெயர்வுகள் மற்றும் மீள்குடியமர்வின் பின்னரான செயற்பாடுகளில் அதிக அளவில் காணிப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் ஒரு மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் உள்ளதாக அந்த மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நடைபெற்ற அரச காணிகள் தொடர்பான இலவச சட்ட உதவி நடமாடும் சேவையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் மக்களிடையே ஒரு பாரிய பிரச்சினையாகவும் மாறியுள்ளது.
பல்வேறு வேலை திட்டங்களின் ஊடாக மக்களின் காணிப்பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படுகின்ற போதிலும் இன்னும் பல பிரச்சினைகள் தீர்க்க முடியாத நிலையில் உள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
காணாமல் போனோர் அலுவலகத்தை அமைப்பது தொடர்பில் எதிர்வரும் 22 ஆம் திகதி வாக்கெடுப்பு!
இலங்கையில் கொரோனா தடுப்பூசியின் திட்டத்தின் ஓராண்டு நிறைவினை முன்னிட்டு விசேட வேலைத்திட்டம் - பிரதமர...
கடன் தள்ளுபடிகள் குறித்து எவ்விதமான உண்மைத் தன்மையும் இல்லை - மக்கள் வங்கி முக்கிய அறிவிப்பு..!
|
|