அதிகரித்துச் செல்கிறது காச நோயாளர்களின் எண்ணிக்கை – இலங்கை மக்களை எச்சரிக்கிறது காசநோய் மற்றும் சுவாச நோய் தொடர்பான தேசிய அமைப்பு!
Thursday, January 28th, 2021
நாட்டில் காச நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துச் செல்வதாக காசநோய் மற்றும் சுவாச நோய் தொடர்பான தேசிய அமைப்பு இதில் 40 வீதமான காச நோயாளர்கள் மேல் மாகாணத்திற்குள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் வருடாந்தம் 8,000 முதல் 9,000 காச நோயாளர்கள் பதிவாகுவதாகவும் காசநோய் மற்றும் சுவாச நோய் தொடர்பான தேசிய அமைப்பின் பிரதி பணிப்பாளர், வைத்தியர் நிரூபா பல்லேவத்த கூறியுள்ளார்.
55 வயதுக்கு மேற்பட்டவர்ளே இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அடையாளம் காணப்படாத சுமார் 5,000 பேர் நோய் காவிகளாக நம் மத்தியிலுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது மிகவும் ஆபத்தானது என கூறிய வைத்தியர், சில நோயாளர்கள் உரிய வகையில் சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளாமல் ஏனையோருக்கும் அதனை பரப்புவதாக எச்சரித்துள்ளார்.
அத்துடன் வருடத்தில் சுமார் 500 பேர் காச நோயினால் உயிரிழப்பதாகவும் தெரிவித்த வைத்தியர் உரிய சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளும் பட்சத்தில், இதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் எனவும் நகரங்களில் வசிப்பவர்களியே அதிகமாக இந்த நோய் பரவுகின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


