அடுத்த வருடம்முதல் 3 தவணைகளிலும் பாடப்புத்தகங்களை வழங்க திட்டம்!

Thursday, April 15th, 2021

பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த வருடம்முதல் மூன்று தவணைகளிலும் பாடப்புத்தகங்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த செயற்றிட்டத்தை கல்வி மறுசீரமைப்பு, தொலைதூரக் கல்வி, திறந்த பல்கலைக்கழகங்கள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: