அடுத்த மாதம்முதல் உர மானியம் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம் – உர செயலகத்தின் பணிப்பாளர் மஹேஷ் கம்பன்பில அறிவிப்பு!
Sunday, September 13th, 2020உர மானியம் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளதாக உர செயலகத்தின் பணிப்பாளர் மஹேஷ் கம்பன்பில தெரிவித்துள்ளார்.
இதன் கீழ் பெரும்போகத்தில் நெற்செய்கையாளர்கள் ஒன்பது இலட்சம் பேருக்கும் வேறு பயிர்ச்செய்கையில் ஈடுபடும் 12 இலட்சம் பேருக்கும் உர மானியம் வழங்கப்படவிருப்பதாக உர செயலகத்தின் பணிப்பாளர் மஹேஷ் கம்பன்பில தெரிவித்துள்ளார்
நெற் செய்கைக்குத் தேவையான உரம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. அத்துடன் மரக்கறி மற்றும் ஏனைய பயிர்களுக்குத் தேவையான உரம் விநியோகிக்கப்படவுள்ளது.
இதற்கமைவாக உர மாநியத்திற்காக அரசாங்கம் ஏழாயிரம் கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளது என்றும் உர செயலகத்தின் பணிப்பாளர் மஹேஷ் கம்பன்பில மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
யாழில் தந்தையின் கொடூர செயல் – மகன் வைத்தியசாலையில்!
நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து புதிய கொள்கை...
பருத்தித்துறையில் மூவர் கஞ்சா போதைப்பொருளுடன் கைது!
|
|