அச்சுவேலியில் பதிவு திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 38 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்!
Wednesday, July 7th, 2021யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தரின் பதிவு திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 38 குடும்பங்களை சுகாதர பிரிவினர் தனிமைப்படுத்தி உள்ளனர்.
கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள ஜே – 276 கிராம சேவையாளர் பிரிவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த பதிவு திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் மாப்பிள்ளை தோழனுக்கு அதாவது மணமகளின் சகோதரனுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் ,மணமக்கள் குடும்பத்தினர் உள்ளிட்ட 38 குடும்பங்களை 56 நபர்கள் அடையாளம் காணப்பட்டு சுகாதார பிரிவினர் தனிமைப்படுத்தி உள்ளனர்.
அதேவேளை குறித்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மணமகனுடன் கடமையாற்றும் 08 பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அவமானப்பட்ட மாணவிக்கு கிடைத்த அதிஷ்டம்! அதிபருக்கு தண்டைனை!
சி.வி.கே. சிவஞானம் செய்த ஊழல்களே எம்மீது திணிக்கப்படுகின்றது – யாழ். கஸ்தூரியார் கடைத்தொகுதி விவகாரம...
எதிர்வரும் 21ஆம் திகதி மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்துச் சேவையை ஆரம்பிக்கத் திட்டம் - இர...
|
|