20 ரூபாய் திருடியதால்  ஒரு வருட சிறை!

Wednesday, August 24th, 2016

தெவட்டகஹ முஸ்லிம் பள்ளிவாயலில் உண்டியலில் இருந்து 20 ரூபாய் பணத்தை திருடியதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒருவருக்கு ஒரு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பலபிடிய ஒரு வருட சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு ஜூலை மாதம் 27ம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த மொஹமட் பாரூக் நிலாம் என்பர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

கறுவாத்தோட்டப் பொலிஸாரினால் வழக்குக்குச் சாட்சியாக 10 ரூபா நாணயத்தாளும், குற்றியொன்றும் நீதிமன்றத்தில் கையளிக்கப்பட்டது. மேலும் நான்கு பேர் சாட்சியாக நீதிமன்றில் முன்னிலையாகியிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த சிறைத் தண்டனை 10 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:

வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ளாத வாக்காளர்களுக்கு – மேலும் இரு தினங்கள் சலுகை – தபால் திணைக்களம் அ...
நிலையான அபிவிருத்திக்கான பயணத்தில் பெண்களின் பங்களிப்பை மேலும் பலப்படுத்த விரிவான வேலைத் திட்டம் - ம...
30 ஆம் நாளன்று சர்வதேச காணாமல் போனோர் தினம் அனுஸ்டிப்பு - செம்மணியில் போராட்டத்துக்கு ஏற்பாடு!