வீதி சட்டங்களை கண்காணிக்க சி.சி.டி.வி. !

Monday, April 4th, 2016

கொழும்பு நகரில் வீதி சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள இன்று முதல் சிசிடிவி கெமராவை பயன்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

யாரேனும் சாரதி வீதி சட்டங்களை மீறி செயற்படுவதாக சிசிடிவி காட்சிகளில் பதிவு செய்யப்படின் அதனை பயன்படுத்தி அந்த சாரதிக்கு எதிராக சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கெமராக்கள் மற்றும் பொலிஸாரின் நடமாடும் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கெமராக்கள் போன்றவற்றை இதற்காக பயன்படுத்தவுள்ளதாக கூறப்படுகின்றது.

Related posts: