வீதியில் வாகனங்கள் தரிப்பதால் கடும் போக்குவரத்து நெருக்கடி!
Monday, October 10th, 2016
மானிப்பாய் சுதுமலை சந்திக்கு அருகாமையில் உள்ள வீதியில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் – மானிப்பாய் வீதியில் உள்ள சுதுமலை சற்திக்கு அருகாமையால் உள்ள பாரஊர்திகள் திருத்தும் நிலையம் ஒன்றில் திருத்த வேலைகளிற்காக வரும் பாரஊர்திகள் வீதியின் கிழக்குப் பக்கமாக உள்ள மதகிற்கு அருகாமையில் வீதியில் நிறுத்தப்பட்டு திருத்த வேலைகள் இடம்பெறுகின்றன. இதனால் இவ் வீதியில் பயணிப்பதில் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக கவலை வெளியிட்டுள்ள மக்கள் உரியவர்கள் தலையிட்டு இப் பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related posts:
மாறி வரும் யாழ்ப்பாணத்தின் சித்திரைப் புத்தாண்டுப் பாரம்பரியம் : ஒரு பார்வை - செல்வநாயகம் ரவிசாந்
பண்டிகையினை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்!
சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவோர் தொடர்பில் தகவல்களை வழங்குங்கள்!
|
|