விஷக்கடிக்கு இலக்காகி மூவர் வைத்தியசாலையில்!

Saturday, July 21st, 2018

தென்மராட்சிப் பகுதியில் கடந்த வியாழக்கிழமை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் விஷ ஜந்து தாக்கங்களிற்கு இலக்கான மூவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சாவகச்சேரியைச் சேர்ந்த 13 வயதான சியந்திகா, கொடிகாமத்தைச் சேர்ந்த 13 வயதான டினோசன், சாவகச்சேரியைச் சேர்ந்த 8 வயதான சஸ்மிகன் ஆகிய மூவருமே இனந்தெரியாத விஷக்கடிக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது கடும் வெப்பம் மற்றும் அதிகரித்த காற்று வீசுவதனால் விஷ ஜந்துக்களின் தாக்கத்திற்கு இலக்காகி அதிகமானோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: