விவசாயிகள் பெரும்போக  நெல்லை விற்கவில்லை.

Tuesday, March 28th, 2017

பெரும்போகத்தில் நெல்லை விற்பனை செய்வதற்காக இதுவரை எந்தவொரு விவசாயியும் வரவில்லை என நெல் விநியோக சபையின் தலைவர் எம்.பி.திசாநாயக்க தகவல் வெளியிட்டுள்ளார்.

தனியார் துறை வர்த்தகர்கள் நெல்லுக்கு அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்வதே இந்த நிலைமைக்கு காரணம் என அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், நெல் விநியோக சபை எந்தவொரு தருணத்திலும் நெல்லை கொள்வனவு செய்வதற்கு தயாராக இருப்பதாக எம்.பி.திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.

Related posts: