வான் கதவுகள் திறப்பு!

Sunday, May 28th, 2017

சீரற்ற வானிலையால் சில நீர் தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளமையால் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இன்றைய தினம் பதிவாகிய கடும் மழை காரணமாக லக்ஷ்பான நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.இதேவளை கெனியன் மற்றும் விமலசூரேந்திர ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டமும் உயர்வடைந்துள்ளன.

நில்வளா கங்கையின் கிளையான கிரிமாஆர கங்கை பெருக்கெடுத்துள்ளன.கிங் கங்கை பெருக்கெடுத்தமையினால் தாழ் நிலங்கள் பல நீரில் மூழ்கியுள்ளன.களனி கங்கை பெருக்கெடுத்தமையினால் களனிமுல்ல உள்ளிட்ட பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

Related posts: