வாகனத்தின் விலையில் மாற்றம்.!

Thursday, March 12th, 2020

ஜப்பான் யென்னின் பெறுமதி அதிகரித்துள்ளதன் காரணமாக, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் சில வாகனங்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரஞ்சித் பீரஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.சசுக்கி வெகனாரின் விலை ஒரு இலட்சத்து 70 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்படுகிறது.

டொயோடா பெசோ வாகனத்தில் விலை ஒரு இலட்சத்து 60 ஆயிரம் ரூபாவினாலும், டொயோடா விட்ஸ் வாகனத்தின் விலை 2 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

டொயோடா எக்ஸியோவின் விலை 3 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாவினாலும், ஹொண்டா வெசல் வாகனத்தின் விலை 4 இலட்சத்தினாலும், ஹொண்டா க்ரேஸ் வாகனத்தின் விலை 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவினாலும் அதிகரிப்படவுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரஞ்சித் பீரஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts:


வலிகளை சுமந்தவாறே மக்கள் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடுகிறார்கள் - நத்தார் வாழ்த்தச் செய்தியில் ஜனாதிப...
மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளனவா என ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை ஜ...
சர்வதேச நாணய நிதியத்தை அணுகுவதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் நிராகரிக்கவில்லை - ஊடகத்துறை அமைச்சர்...