வவுனியா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர் கைது!
Wednesday, February 8th, 2017
வவுனியாவில் அரச வேலை பெற்றுத்தருவதாக நிதி மோசடியில் ஈடுபட்ட தாதிய உத்தியோகத்தர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா பொது வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தராக கடமையாற்றி வரும் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த உத்தியோகத்தர் நான்கு பேரிடம் வைத்தியசாலையில் வேலை பெற்றுத்தருவதாக தெரிவித்து 120,000 ரூபாவினைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று காலை இது தொடர்பாக பணம் கொடுத்த ஒருவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து, பொலிசார் சூட்சுமான முறையில் இன்று மாலை குறித்த தாதிய உத்தியோகத்தரை கைது செய்துள்ளனர். குறித்த நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்
Related posts:
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் திருமஞ்சத் திருவிழா விமரிசை!
தொழில் திணைக்களத்தின் பணிகள் வழமை போன்று நடைபெற்று வருகிறது – தொழில் அமைச்சர்!
நீண்டகாலத்திற்குப் பின் விலங்கன்கலட்டி வீதி புனரமைப்பு!
|
|
ஜனாதிபதியின் நிலையான சூழல் பாதுகாப்பு கொள்கையை நிறைவேற்றுவதே நோக்கம் - அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல!
பல்கலைக்கழக விவகாரத்தை வைத்து அரசியல் நடத்தாமல் ஒத்துழைப்பு வழங்குங்கள் - அமைச்சர் ஜீவன் தொண்டமான் வ...
சேவைகளைப் பெறுவதற்கு திகதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே முன்பதிவு செய்வது கட்டாயம் - மோட்டார் போக்கு...