வறட்சியிலிருந்து மீளும் அளவுக்கு மழைவீழ்ச்சி இல்லை!
Monday, January 23rd, 2017
நாட்டின் பல பிரதேசங்களில் மழை பெய்துள்ளது. இருப்பினும் வறட்சியிலிருந்து மீளும் அளவுக்கு இந்த மழைவீழ்ச்சி போதுமாதல்ல என்று தேசிய அனர்த்த மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
வறட்சி காரணமாக தற்போது நாட்டில் 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு;ள்ளனர். சில பிரதேசங்களில் மழை பெய்துள்ள போதிலும், அனர்த்த முகாமைத்துவ நிலையம் முன்னெடுக்கும் நிவாரண சேவை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று பிரதீப் கொடிப்பிலி கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலேயே கூடுதலானோர் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். 66 ஆயிரத்து 757 குடும்பங்களைச் சேர்ந்த 3 லட்சத்து 24 ஆயிரத்து 329 பேர் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts:
நகர்ப்புறங்களில் மாத்திரமின்றி கிராமப்புறங்கள் தொடர்பாகவும் கல்வி அமைச்சு தீவிர கவனம் செலுத்த வேண்டு...
எரிபொருளை எடுத்துச் செல்வதற்காக ரயில்வே துறையின் பங்களிப்பு அதிகரிப்பு - அமைச்சர் உதய கம்மன்பில!
குற்றவாளிகள் பொறுப்பை ஏற்று மனந்திருந்தினால் அவர்களை மன்னிக்க முடியும் - கொழும்பு பேராயர் கர்தினால் ...
|
|
|


