வட மாகாண அமைச்சர்களது குற்றச்சாட்டு விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டது!

Wednesday, June 7th, 2017

முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சபை அமர்வில் பங்கேற்காததால், வட மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை அறிக்கை இன்று வடமாகாண சபையில் சமர்ப்பிக்கப்படவில்லை

இந்த நிலையில், குறித்த அறிக்கை தொடர்பாக விவாதிப்பதற்காக நாளையதினம் 11.00 மணிக்கு வடமாகாண சபையில் விசேட அமர்வொன்று நடைபெறவுள்ளதாக அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம்  அறிவித்துள்ளார்குறித்த அறிக்கையில் ஐங்கரநேசன் மற்றும் குருகுலராசா ஆகிய இரண்டு அமைச்சர்களையும் பதவி நீக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: