வடக்கின் முதல்வருக்கு வைத்தியசாலையில் சிகிச்சை!
Monday, April 25th, 2016வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, இருதய நோய் சிகிச்சை பிரிவில் இன்று திங்கட்கிழமை (25) சிகிச்சை பெற்றுள்ளார்.
முதலமைச்சருக்கு இருதய நோய் இருப்பதன் காரணமாக அவர் கடந்த காலங்களிலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இந்நிலையில், இன்றும் சிகிச்சை பெறுகின்றார். அவர் விடுதியில் அனுமதிக்கப்படவில்லையெனவும், சிகிச்சை மாத்திரம் பெற்றார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உடல்நலக் குறைவால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் கடந்த 18 ஆம் திகதி நடைபெறவிருந்த சந்திப்பும் தடைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எட்டாவது இடத்தில் இலங்கை?
எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல் அடுத்த வாரம் நாட்டை வந்தடையும் - போதுமானளவு எரிவாயு உள்ளதாக தொழில்ந...
கடந்த ஆண்டில் இலங்கை தேயிலையை அதிகளவில் இறக்குமதி செய்த நாடாக ஈராக் பதிவு!
|
|