ரைஸ் குக்கரின் வயரினால் பெண்ணொருவர் கழுத்து நெரித்து கொலை!
Sunday, January 21st, 2018
ஊருபொக்க பிரதேசத்தில் பெண் ஒருவர் கழுத்து நெரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். வாடகைக்கு குடியிருந்த வீட்டினுள் இவர் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்த ரைஸ்குக்கரின் வயரினால் கழுத்தை நெரித்து இந்தக்கொலைச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. கொலை தொடர்பில் அவரது கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை தொடர்பில் இவரது கணவன் மனைவியின் கள்ளத்தொடர்பு தெரியவந்துள்ளதால் கொலையை மேற்கொண்டுள்ளார் எனத் தெரியவருகின்றது.
27 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் எனத்தெரியவந்துள்ளது.
மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை மாத்தறை மருத்துவமனையில் இடம்பெறவுள்ளதாக தெரியவந்துள்ளது.
Related posts:
தேசிய கல்வி முதுமாணிக் கற்கை நெறிக்கான விண்ணப்பம் கோரல்!
திடீரென முடங்கிய பேஸ்புக்! காரணத்தை என்ன!
வாரத்தில் 3 நாட்கள் மாத்திரம் பாடசாலை – முதலாம் தவணை பரீட்சை நடத்தப்படமாட்டாது - கல்வி அமைச்சு அறிவி...
|
|