யாழ். மாவட்டக் கடற்தொழில் அமைப்புக்கள் திட்டமுன் மொழிவுகளைச் சமர்ப்பிக்க முடியும்!

Sunday, August 7th, 2016

யாழ். மாவட்டத்தில் உலக வங்கியின் நிதியுதவியில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்களுக்கான திட்ட முன் மொழிவுகளை யாழ். மாவட்டக் கடற்தொழில் அமைப்புக்கள், பிரதேச செயலகம், மாவட்டச் செயலகம், கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களம் என்பவற்றிற்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறு யாழ். மாவட்டக் கடற்தொழில் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

கடந்த-2015 ஆம் ஆண்டு சம்மேளனத்திற்குத் திட்ட முன்மொழிவுகளை அனுப்பி வைத்த கடற்தொழில் அமைப்புக்கள் மீளவும் அனுப்பத் தேவையில்லை எனவும், இதுவரை திட்ட முன்மொழிவுகளை அனுப்பாத கடற்தொழில் அமைப்புக்கள் எதிர்வரும்-10 ஆம் திகதிக்கு முன்னதாகத் திட்ட முன் மொழிவுகளை அனுப்பி வைக்குமாறும் யாழ். மாவட்டக் கடற்தொழில் கிராமிய அமைப்புக்களின் சம்மேளனத் தலைவர்  தெரிவித்துள்ளார்.

Related posts: