யாழ். மட்டுவிலில் 31 வயது இளைஞர் தற்கொலை
Friday, May 5th, 2017
யாழ். மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்திற்கு அண்மையிலுள்ள வீடொன்றில் இளைஞரொருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை(04) காலை-06:30 மணியளவில் குறித்த இளைஞர் வீட்டின் கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டமைக்கான சரியான காரணம் எதுவும் இதுவரை தெரியவரவில்லை.
இதேயிடத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் கஜதீபன்( வயது -31) என்ற இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார். சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Related posts:
தீர்வு கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் யாழ்.மாநகர சபை சுகாதார தொழிலாளர்கள் திட்டவட்டம்!
தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை முடித்த 228 பேர் வீடுதிரும்பினர்!
யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் டெங்கு தொற்று - பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரலிக்கை!
|
|
|


