யாழ். மட்டுவிலில் 31 வயது இளைஞர் தற்கொலை
Friday, May 5th, 2017யாழ். மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்திற்கு அண்மையிலுள்ள வீடொன்றில் இளைஞரொருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை(04) காலை-06:30 மணியளவில் குறித்த இளைஞர் வீட்டின் கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டமைக்கான சரியான காரணம் எதுவும் இதுவரை தெரியவரவில்லை.
இதேயிடத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் கஜதீபன்( வயது -31) என்ற இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார். சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Related posts:
நீதிக்கான அணுகலில் எந்தவிதமான பாகுபாடும் கிடையாது – நீதி அமைச்சர் அலி சப்ரி!
குத்தகை அடிப்படையில் சரக்கு விமானமொன்றை பெற்றுக் கொள்ள அமைச்சரவை அனுமதி!
ஐரோப்பிய பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து இலங்கை வந்தடைந்தார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!
|
|