யாழ். குடாநாட்டின் சில இடங்களில் நாளை மின்தடை !
Thursday, September 1st, 2016
மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை வெள்ளிக்கிழமை(02) யாழ். குடாநாட்டின் சிலவிடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாண மின் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
இதன் படி நாளை வெள்ளிக்கிழமை(02) காலை-08.30 மணி முதல் மாலை-5.30 மணி வரை புன்னாலைக்கட்டுவன், புன்னாலைக்கட்டுவன் வடக்கு, குரும்பசிட்டி, வயாவிளான், மயிலங்காட்டின் ஒரு பகுதி, அச்செழு உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
நெடுந்தீவுக்கான படகு சேவை மீண்டும் ஆரம்பம்!
உறவினர்களிடையே மோதல்; அல்வாயில் ஒருவர் உயிரிழப்பு!
சில பரிந்துரைகளை, இலங்கை ஏற்கனவே அமுல்படுத்தியுள்ளது - சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கைக்கு மத்திய வ...
|
|