யாழ். அச்சுவேலியில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

யாழ். அச்சுவேலி கதிரிப்பாய்ப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.அச்சுவேலி கதிரிப்பாய்ப் பகுதியில் வர்த்தக நிலையமொன்றினை நாடாத்தி வரும் குறித்த குடும்பஸ்தர் கடந்த புதன்கிழமை(24) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. இந்நிலையில் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்குச் சென்ற மல்லாகம் பிரதேச திடீர் இறப்பு விசாரணை அதிகாரி கிறிஸ்தோபர் விசாரணைகளை மேற்கொண்டார். இதேயிடத்தைகிசேர்ந்த சு. தூபதீபன்(வயது-32) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார்.
Related posts:
வல்லப்பட்டைகளுடன் இரண்டு இந்திர்க்ள் கைது!
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை - கிளிநொச்சி மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான பெரும் போக நெற்செய...
நாட்டின் வருமானத்தில் அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் போன்றவற்றை வழங்குவதால் எந்தச் செலவையும் மே...
|
|