யாழ்ப்பாணத்தில் இரு பாடசாலைகளின் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன!
Friday, March 24th, 2017
உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாசாலை மற்றும் நாவாந்துறை றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு யாழ். வலயத்தில் கடமையாற்றும் அதிபர் சேவையைச் சேர்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
வகை-02 இனைச் சேர்ந்த அதிபர்கள் விண்ணப்பிக்காத சந்தர்ப்பத்தில் வகை-3 இனைச் சேர்ந்த அதிபர்களும், தற்போது அதிபர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து நியமனம் பெற்றுக் கொண்ட அதிபர் வகுப்பு-3 இனைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்க முடியுமென யாழ். வலயக் கல்விப் பணிப்பாளர் நா.தெய்வேந்திரராஜா தெரிவித்துள்ளார்.
விண்ணப்பப் படிவங்களை யாழ். கல்வி வலயத்தின் பொது நிர்வாகக் கிளையில் பெற்று பூர்த்தி செய்த பின்னர் ஏப்ரல் மாதம்-06 ஆம் திகதிக்கு முன் வலயக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறும் அவர் கேட்டுள்ளார்.
Related posts:
இராணுவ கண்காணிப்பின் கீழ் கஞ்சா வளர்ப்பு!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா பெறுமதி மேலும் உயர்வு - இலங்கை மத்திய வங்கி தகவல்!
காலாவதி திகதி குறிப்பிடாமல் வழங்கப்பட்ட அனைத்து கனரக போக்குவரத்து சாரதி உரிமங்களும் இரத்து செய்யப்பட...
|
|
|


