யாழில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை கஞ்சாப் பொதி!

Friday, October 13th, 2017

யாழ். காங்கேசன்துறைக் கடற்பரப்பிலிருந்து ஐந்து கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் மிதந்து வந்த 153 கிலோக் கிராம் கேரளாக் கஞ்சாப் பொதிகள்   கைப்பற்றப்பட்டுள்ளதாக காங்கேசன்துறைப்  பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.

ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால் குறித்த கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்தியாவிலிருந்து படகுகளில் குறித்த கஞ்சாப் பொதிகள் கடத்தி வரப்பட்டிருக்கலாம் எனவும் கடற்படையினரைக் கண்டதும் குறித்த கஞ்சாப் பொதிகளைக் கடலில் வீசி விட்டுக் கடத்தல்காரர்கள் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: