யாழில் இராணுவத்தினரின் பாரிய ஆயுதக் கிடங்கு அகற்றல்!

Tuesday, April 17th, 2018

வலிவடக்கு மயிலிட்டி பகுதியில் அமைந்திருந்த இராணுவத்தினரின் பாரிய ஆயுத கிடங்கு அங்கிருந்து அகற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 13ஆம் திகதி வலிகாமம் வடக்கில் 683 ஏக்கர் காணி மீள்குடியேற்றத்திற்காக வழங்கப்பட்டது.

இந்நிலையில், மயிலிட்டி வடக்கில் அமைத்திருந்த இராணுவ ஆயுத கிடங்கு மற்றும் அதனுடன் இணைந்த கட்டடங்கள் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு பொருத்தப்பட்ட கூரையின் இரும்புக் கேடர்களை இராணுவத்தினர் வாகனங்களில் எடுத்துச் செல்வதுடன் ஆயுதக் கிடங்கினை சுற்றிவர உயரமாக அமைக்கப்பட்டிருந்த மண் அணைகளும்அகற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மயிலிட்டி மக்களின் காணிகள் விடுவிக்கக்கூடாது அங்கு இராணுவத்தினரின் ஆயுதக் களஞ்சியம் உள்ளது என தேசிய போர் வீரர்கள்முன்னணி அமைப்பு கோரியிருந்தது.  எனினும் இதனை ஜனாதிபதி மறுத்ததுடன் மக்களின் காணிகள் விடுவிக்கப்படவேண்டும் என தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: