முல்லைத்தீவில் கடும் வறட்சி – இராணுவத்தினரால் மக்களுக்கு குடிநீர் விநியோகம்!

Saturday, July 31st, 2021

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது நிலவும் வறட்சி காரணமாக குடிநீர் பற்றாக்குறை நிலவும் பிரதேசங்களுக்கு இராணுவத்தினரால் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் உள்ள இராணுவத்தினர் மற்றும் விமானப்படையினர் கரைதுறைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட கேப்பாப்புலவு சூரிபுரம், பிரம்படி மற்றும் பிலக் குடியிருப்பு போன்ற பகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றனர்.

இதேபோன்று ,ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளிலும் கரைதுறைப்பற்று பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கும் இராணுவத்தினர் பவுசர் மூலம் குடிநீர் விநியோகத்தை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: