மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு!
Tuesday, November 15th, 2016இலங்கை கடல் எல்லைப்பகுதிக்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதான குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ள 4 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் ஏ.எல்எம் றியால் இவர்களது விளக்கமறியலை எதிர்வரும் 28ம் திகதி வரை நீடிப்பதற்கு உத்தரவு பிறப்பித்தார். இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்களான இவர்கள் கடந்த 1ஆம் திகதி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
அடுத்த வாரம்முதல் பல்கலைக்கழக நடவடிக்கைகளை கட்டம் கட்டமாக ஆரம்பிக்க தீர்மானம் - பல்கலைக்கழக மானியங்...
இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை - சிறுமி பலி – ஒருலட்சத்திற்குட் அதிகமானோர் பாதிப்பு!
எரிபொருள் இல்லையென்கிறார்கள் - ஆனால் பெருமளவான வாகனங்கள் வீதிகளில் பயணிக்கின்றன - அமைச்சர் காஞ்சன வி...
|
|