மீனவரை தேட மாலைத்தீவின் உதவியை நாடும் இலங்கை!

ஒலுவில் துறைமுகத்திலிருந்து காணாமல் போன மீனவர்களை தேடும் பணிகளுக்காக மாலைத்தீவு பாதுகாப்பு படையினரின் உதவியை நாடியுள்ளதாக பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் காணாமல் போயிருந்த மீனவர் இருவர் கடந்த புதன் கிழமை மாலைத்தீவு கடற்படையினரால் மீட்கப்பட்டார். கல்முனையிலிருந்து இரண்டு மீன்பிடிப் படகுகளில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஆறு பேர் காணாமல் போயிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த ஆறு பேரில் இருவர் மாலைத்தீவு கடற்படையினரால் மீட்கப்பட்டிருந்தனர்.
ஹாஜா மொஹைதீன், முஹமட் அர்ஜீல் ஆகியோரே மீட்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப்படகாளர் சங்க தலைவர் எம்.எஸ் நஸீர் தெரிவித்திருந்தார்.
Related posts:
யாழ். மத்தியின் முன்னாள் அதிபர்கள் இருவரின் உருவச் சிலைகள் திறப்பு!
யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைதான 12 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்
நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்பு - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூ...
|
|