மீண்டும் வைத்தியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம்!

Saturday, January 13th, 2018

அரசு மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியின் நெருக்கடிக்கு நிரந்தர தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்காவிடின் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடபோவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின்  அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன் செயலாளர் மருத்துவர் ஹரித ஹலுத்கே கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் உரிய தீர்வை எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னர் வழங்கத் தவறின் இவ்வாறு வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: