மீண்டும் திடீரெனப் பற்றி எரியும் காடு!

Thursday, April 26th, 2018

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு படைமுகாம் அமைந்துள்ள பகுதிக்கு அண்மையில் உள்ள தேக்கு மரக்காட்டில் இரண்டாவது தடவையாகவும் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்து கடும் வெய்யில் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த தீப்பரவல் காரணமாக 25 ஏக்கர் வரையான தேக்குமரக்காடுகள்எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர்.

இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமையும் கேப்பாப்புலவு காட்டுப் பகுதியில் சுமார் 40 ஏக்கர் பகுதி தீயினால் முற்றாக அழிவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: