மின் நிலையத்தின் சுழல் இயந்திரங்கள் வழமைக்கு வந்தன!  

Tuesday, November 1st, 2016

நீர் மின் உற்பத்தியின் மூலம் தேசிய மின் வலைப்பின்னலுக்கு சேர்க்கப்படும் மின்சாரத்தின் அளவு தற்போது 15 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் நிலைபேறான எரிசக்தி அமைச்சின்  ஊடக பேச்சாளர் சுலக்சன ஜயவர்த்தன  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்- நீரேந்து பகுதிகளில் போதுமான அளவு மழை பெய்யாமையே இதற்கு காரணம் என்றும் நீர் மட்டம் குறைந்தளவில் காணப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் மூன்றாவது சுழல் இயந்திரம் இன்று முதல் செயற்படுகிறது. இந்த நிலையத்தின் மூன்று சுழல் இயந்திரங்களும் கடந்த 15ம் திகதி செயலிழந்தன. இதனால் தேசிய மின் வலைப்பின்னலுக்கு 900 மெகாவோட்ஸ் மின்சாரம் இல்லாமல் போனது.

ஒரு வாரத்திற்குள் ஒரு சுழல் இயந்திரத்தையும், இரண்டாவது வாரத்தில் இரண்டாவது சுழல் இயந்திரத்தையும் செயற்படுத்துவதற்கு அமைச்சினால் முடிந்துள்ளது. மூன்றாவது சுழல் இயந்திரம் இன்றிரவு முதல் செயற்படும் என்றும் அமைச்சின் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

7bde5a4cd8b9e77771208bb220da534f_XL

Related posts: