மந்திகையில் விபத்து – இளம் பெண் படுகாயம்!
Wednesday, April 27th, 2016
பருத்தித்துறை மந்திகை எரிபொருள் நிலையம் முன்பாக இன்று இடம்பெற்ற டிப்பர்- மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று முற்பகல் 10.45 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில் புலோலி தெற்கைச் சேர்ந்த இராமசாமி ஜெயகலா (27) படுகாயமடைந்து மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


Related posts:
வாகனங்களுக்கு இலத்திரனியல் முறையில் அனுமதி பத்திரம்!
கொரேனானா தொற்று - மேலும் 15 பேர் பலி!
மின்வெட்டுக் காரணமாக நுகர்வோர் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது - இலங்கை மின்சார சபைக்க...
|
|
|


