மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாண பணிகளை மிக விரைவில் நிறைவு செய்ய தீர்மானம் – நெடுஞ்சாலைகள் அமைச்சர் தெரிவிப்பு!
Thursday, October 1st, 2020
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாண பணிகள் மிக விரைவாக நிறைவு செய்வதற்கு அரசாங்கமானது தீர்மானித்துள்ளது.
கடவத்தை தொடக்கம் மீரிகம வரையான அதிவேக நெடுஞ்சாலையானது எதிர்வரும் 5 மாதங்களில் நிறைவுச் செய்யப்படவுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சரான ஜோஹன்ஸ்டோன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார் .
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாண பணிகள் கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டன.
இதில் குறைபாடுகள் நிலவின ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய இதன் கட்டுமாணத்தை விரைவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் இதன் போது மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட 9 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை!
கடந்த ஆண்டு நாய் கடித்து மூவர் பலி: 7,661 பேருக்கு சிகிச்சை!
இந்தியா செல்கின்றார் ஜனாதிபதி ரணில் – பாரதப் பிரதமர் மோடியுடன் விசேட சந்திப்புக்கான திகதியும் நிர்ணய...
|
|
|


